Adi Penne (Duet) - Stephen Zechariah Lyrics


Adi Penne (Duet)
Singer Stephen Zechariah
Composer Stephen Zechariah
Music Stephen Zechariah
Song WriterT Suriavelan

Lyrics

அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்

ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து
உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

உன் பார்வை என்னை கொல்ல
சாய்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா

ஓ உனது சிரிப்பினில் சிதரும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
வேர்வை துளிகளும் தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ

இருவர் வாழும் உலகிலே
உன்னை அனைத்து கொள்வேன் உயிரிலே
இருவர் தீயும் நிலவிலே
நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே

அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்.

உன் பார்வை என்னை கொல்ல
சாய்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதொ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதொ புது மயக்கம்

எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வின் தந்த்தோ
தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ

மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அனைத்து கொல்லாத உயிரிலே
விழிகள் பேசும் மொழியிலே
இனி மெளனம் கூட பிழை இல்லை

அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதொ புது மயக்கம்

நீ இரவல் உயிரா
உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி

நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

உன் பார்வை என்னை கொல்ல
சாய்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா


Adi Penne (Duet) Watch Video

Post a Comment

Previous Post Next Post