Soorarai Pottru - Veyyon Silli Lyric | Suriya | G.V. Prakash Kumar | Sudha Kongara

"Veyyon Silli Lyrics In Tamil" Song Info

சீயஞ் சிறுக்கிகிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்

உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு

இவ வீதியில் வாரத
வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு

இடுக்கியே ஏ ஏ
இடுக்கியே ஏ ஏ
அடிக்கிறா அடிக்கிறா
அடுக்கியே அடுக்கியே

வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா

கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

மல்லாட்ட ரெண்டா
என்னாட்டம் வந்தா

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

என் காது ஜவ்வுல
இசையும் ஒவ்வுலா
நீ மட்டும் பேசடி
ஏழட்டும் நாளுட்டும்
எதுவும் உங்கள் இச்சொன்னு வீசடி


கண்ணுல உதடு
மின்னலு தகடு
எனக்கு தானடி
சட்டையில் பாக்கெட்டே தச்சது
உன்னைய பதுக்கதானடி

தின்னா..... ஆணம் வெச்சு தின்னா....
உள்ளே... உன் கொக்காமக்கா நின்னா

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே....
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே....

தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
இதயம் பறிச்சியே....
கரண்டு கம்பியா சொரண்டி
கிடந்த கதண்ட எறிச்சியே...

ஓ.... பதனம் உதற
கவனம் செதற
மனச கலைச்சியே....
கருக்க பொழுதில்
சிரிச்சு தொலைச்சு
பகல படைச்சியே....

தீயா இவ வந்தா....
மண்டவெல்லம் துண்டா....
உண்டா.... இந்த ஜிகிர்தண்டா....

ஏய்..... என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா

கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்.

"Veyyon Silli Lyrics In Tamil" Song Video

1 Comments

Post a Comment

Previous Post Next Post